2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பிரதமர் ரணில் விக்மரசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில்இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்மரசிங்க, இன்று (23) ஆஜராகியுள்ளார்.

மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே பிரதமர் அங்கு ஆஜராகியுள்ளார்.

மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதால், அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் அமைச்சர் தயா கமகே ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X