Janu / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயதுடைய இளைஞர் எனவும், அவர் ஒரு பல்கலைக்கழக மாணவன் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த பெண் இந்த வாடகை வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போதே இக் கொடுமைக்கு முகம் கொடுத்துள்ளார்.
சம்பவம் குறித்து உடனடியாக செயற்பட்ட உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பணியகத்தின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அமில பிரியங்கர தலைமையிலான குழுவினர், சந்தேகநபரையும் அவர் பயன்படுத்திய வாகனத்தையும் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரகின்றனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago