Freelancer / 2026 மே 05 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது.
இக்கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களிலும், பா.ஜ.க 4 இடங்களிலும், அ.தி.மு.க. மற்றும் லட்சிய ஜனநாயகக் கட்சி தலா ஒரு இடங்களிலும் என 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. த.வெ.க கூட்டணி 2 இடங்களில் வென்றுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க, ல.ஜ.க இடம் பெற்றிருந்தன.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க இடையே ஏற்பட்ட மோதலால் இக்கூட்டணியே குழப்பத்துடன் தேர்தலை சந்தித்தது. எனினும் தி.மு.க 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க ஒரு தொகுதியில் வென்றுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 12, பா.ஜ.க 4, அ.தி.மு.க 1, ல.ஜ.க 1 என 18 தொகுதிகளில் வெற்று பெற்றுள்ளன. இதன்மூலம் புதுச்சேரியில் என்டிஏ தலைவரான ரங்கசாமி மீண்டும் 5 வது முறையாக முதல்வராகிறார். (a)
13 minute ago
2 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
16 May 2026
16 May 2026