2025 மே 13, செவ்வாய்க்கிழமை

புலிகளின் சின்னங்களை பயன்படுத்தக் கூடாது

Freelancer   / 2023 நவம்பர் 20 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், அவர்களின்
அடையாளர்கள் எவற்றையும் பயன்படுத்தக் கூடாது என கிளிநொச்சி பொலிஸார் அறிவுறுத்தியதாக  தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ​(19) ஞாயிற்றுக் கிழமை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தானும் தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளரமான ச. கீதனும் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்த அவர் :

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய சின்னங்கள் எவையும் பயன்படுத்தக் கூடாது என பொலிஸார் தெரிவித்ததாகவும் குறிப்பாக கார்த்தினை பூவை கூட பயன்படுத்தக் கூடாது என்றும் தமக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் தாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் நகுலன் தெரிவித்தார்.

மு.தமிழ்ச்செல்வன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X