Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 04, சனிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 13 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - பூநகரி பகுதியிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைப்போமென, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.
யாழில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், பூநகரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை இன்னும் அகற்றப்படவில்லை எனவும் ஆகவே, இன்றிலிருந்து இன்னும் 2 வாரங்களுக்குள் அந்தப் பண்ணையை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறினால், தாங்களும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் சட்டவிரோதமான பண்ணைகளை நிறுவுவோமெனவும் எச்சரித்தார்.
"அதன் பின்னர் வரும் விளைவுகளை சந்திக்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். மேலும் சீனா இதனூடாக கடலை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது என்பதனை இந்தியா உள்ளிட்ட நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் சிவாஜிலிங்கம் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
03 May 2024
03 May 2024