Editorial / 2020 ஏப்ரல் 04 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூஸா கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேர்களைக் கொண்ட இரண்டாவது குழுவும் இன்று வெளியேறியுள்ளதென, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த 6 பேரும் இலங்கையர்கள் எனத் தெரிவித்துள்ள கடற்படை, முதலாவதாக வெளியேறிய குழுவில் ஜப்பானைச் சேர்ந்த பெண்ணொருவர், பிரான்ஸை சேர்ந்த இருவர், இலங்கையைச் சேர்ந்த இருவர் என ஐவர் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது குறித்த முகாமில் 64 பேர் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .