Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 20 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பெரியவர்களுடன் பாலுறவு கொள்ளும் வீடியோக்களை ஆபாச இணையத்தளங்களுக்கு விற்பனை செய்து வந்த 19 வயதான இளம் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் , ராகம பிரதேசத்தில் உள்ள விஹாரையில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் 7 வயது முதல் 18 வயது வரையிலான சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததாகவும், அவர்களில் 80 சதவீதமான படங்கள் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடையது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட போது, சந்தேகநபரிடம் மூன்று கணினிகள் கைப்பற்றப்பட்டன மற்றும் 1500 க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடக குழுக்களுக்கு சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் பாலியல் காட்சிகள் பரவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கணினி குற்ற புலனாய்வு பிரிவின் சமூக ஊடக குற்ற புலனாய்வு பிரிவு சமீபத்தில் விசாரணையை தொடங்கியது.
தான் தொடர்பு கொண்ட சமூக ஊடக கணக்குகள் மூலம் பணத்துக்கு படங்களை சந்தேக நபர் விற்றுள்ளார்.
சிறுமிகளின் நிர்வாண காட்சிகள் அடங்கிய படச்சட்டங்களை மொத்தமாக விற்பதையும், தடை செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி பரிமாற்ற முறையான கிரிப்டோ கரன்சி பணமாக பணம் வசூலிக்கப்படுவதையும் விசாரணையின் போது கண்டறிந்துள்ளனர்.
சந்தேகநபர் பற்றிய தகவல்களை வெளிப்படுத்திய அதிகாரிகள், சந்தேக நபருடன் குறுஞ்செய்திகளை பரிமாறி, சந்தேக நபரின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர், அவர்கள் புகைப்படங்களைக் கேட்டு, 2000 ரூபாவை கிரிப்டோ கரன்சி பரிமாற்றம் மூலம் சந்தேக நபருக்கு அனுப்பியுள்ளனர்.
கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேகநபரின் சட்டவிரோதச் செயலை உறுதிப்படுத்தியதுடன், நவீன தொழில்நுட்பத்தினூடாக நீண்ட நேர விசாரணையின் பின்னர் சந்தேகநபர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியபோது அது தேவத்தை பகுதியில் உள்ள விஹாரை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்யும் வரை சந்தேக நபர் விஹாரையில் வசிப்பவர் என்று தமக்கு தெரியாது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
53 minute ago
1 hours ago