2025 ஜூலை 05, சனிக்கிழமை

பெப்ரல் அமைப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம்

Editorial   / 2019 ஜனவரி 09 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியாக மாகாண சபைகள் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு அதிருப்தியைத் தெரிவித்து, பெப்ரல் அமைப்பு மீண்டுமொரு தடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இதுவரை 6 மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளதுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறையடையவுள்ளதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே மக்கள் இறைமையான தேர்தல் உரிமையை பாதுகாக்கக் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொள்ள வேண்டுமென்றும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .