2026 மார்ச் 16, திங்கட்கிழமை

பேருவளைக் கடற்பரப்பில் மற்றுமொரு படகு சிக்கியது (வீடியோ)

Lenin Raj   / 2026 மார்ச் 16 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


 பேருவளைக் கடற்பரப்பில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றை கடற்படையினர் இன்று (16) தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

குறித்த படகு தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தப் படகில் உள்ள போதைப்பொருட்களின் அளவு மற்றும் சந்தேகநபர்கள் குறித்த மேலதிக விபரங்கள், படகு கரைக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் ஊடாக வெளிப்படுத்தப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X