Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 05 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நபரொருவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பேருவளை பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 16 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து நபரொருவர் தன்னிடம் 50 வாள்களை வழங்கி, பேருவளை பிரதேசத்துக்கு மறைத்து கொண்டுச்சென்று சிலருக்கு வழங்கும்படி தெரிவித்ததாகப் பொலிஸாரிடம் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .