Editorial / 2024 நவம்பர் 05 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான உனகொருவே ஜப்பான் சாந்த, தற்போது சிறையில் இருக்கும் பொடி லேசி ஆகியோரின் சட்டவிரோதமான துப்பாக்கியை வைத்திருந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பிலிபிட்டிய கொத்தலாவல பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி, 25 தோட்டாக்கள், 01 மகசீன், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 01 மகசின், 01 துப்பாக்கி, 9mm ரக துப்பாக்கிகள் 07, மகசீன், 02 வாள்கள், ரம்போ கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடும் வகையில் துப்பாக்கி, வாள், கத்தி போன்ற ஆயுதங்களை அணிந்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
32 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
39 minute ago
50 minute ago