2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பொதுத் தேர்தலில் Cotton Buds பயன்படும்

Editorial   / 2020 ஜூன் 13 , பி.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது,  வாக்காளர்களின் விரல்களில், காதுகளை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் பஞ்சு (Disposable cotton buds) மூலம் தடவப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (12) 200 வாக்காளர்களுடன் நடத்தப்பட்ட தேர்தல் ஒத்திகையின்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவினர் அதிகாரிகள், வாக்காளர்களின் கைகளில், காதுகளை சுத்திகரிக்கப் பயன்படும் பஞ்சையே பயன்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர், மார்க்கர் பேனாக்களே பயன்படுத்தப்பட்டன.

இந்தத் தேர்தல் ஒத்திகை, காலை 8.30 மணி வரை 12.30 வரை, 200 வாக்காளர்களுக்கு மாத்திரம், சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்ட தேர்தல் ஒத்திகை வெற்றியளித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணையகத்தன் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X