2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பொறியியல் பிரிவு மாணவன் உயிரிழப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவில் கல்விகற்ற மலையகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

பூண்டுலோயா, டன்சில்வத்தையைச் சேர்ந்த 24 வயதுடைய ஜி. துர்கேஷ்வரன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொறியியல் பீட மூன்றாம் ஆண்டைச் சேர்ந்த இந்த மாணவன், பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். 

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .