2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் “சமியா” பலி

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் அங்கொட லொக்காவின் மற்றுமொரு நெருங்கிய நண்பரான, “சமியா” எனப்படும் மல்வத்து ஹிரிபிட்டிய சமிந்த எதிரிசூ​ரிய, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் ஹெரோய்ன் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, நேற்று இரவு பொலிஸாரால் கம்பஹா பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர், கான்ஸ்டபிள் ஒருவரின்  துப்பாக்கியைப் பறித்து, பொலிஸார் மீது  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட போதே, பொலிஸார் சந்தேகநபர் மீது துப்பாக்கிச்  சூடு நடத்தியதாகவும் இதன்போது, சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

 

 

 

.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .