Simrith / 2025 நவம்பர் 03 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயது சந்தேக நபர், கந்தேகெட்டிய பொலிஸாரின் காவலில் இருந்தபோது நோய்வாய்ப்பட்டு, கந்தேகெட்டிய பிரதேச மருத்துவமனையில் இருந்து மஹியங்கனை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) இரவு இறந்தார்.
உயிரிழந்த நவரத்ன முதியன்சேலாகே அஜந்த புஷ்பகுமார, மீகஹகியுல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏஎஸ்பி வெஹித தேசபிரியவின் அறிவுறுத்தலின் கீழ், மடுல்சிம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சிஐ ஹெச்.பி. திசாநாயக்க, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago