2025 ஜூன் 25, புதன்கிழமை

பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கழிவுகளை கொட்டுவதற்கு நடவடிக்கை

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருவாக்காடு பிரதேசத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு புத்தளம் பிரதேசத்தில் எதிர்ப்புகள் முன்னெடுக்கப்படுவதால், கொழும்பிலிருந்து கொண்டு செல்லப்படும் கழிவுகளை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அருவாக்காடு பிரதேசத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்த வேண்டாமென, மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொழும்பில் சேர்க்கப்படும் கழிவுகளை அருவாக்காடு பிரதேசத்தில் கொட்டும் போது, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில், முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்து, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இசுர தேவப்ரிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .