2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

போட்டி போட்டுச் சென்றதில் 19 பேர் காயம்

Editorial   / 2019 ஜூன் 08 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரஸ்ஸ - தெனியாய பிரதான வீதியின் ஹுலந்தவ பகுதியில், பஸ்ஸொன்று பிரண்டு விபத்துக்குள்ளானதில், 19 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெனியாயவிலிருந்து அக்குறஸ்ஸ நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும் தவலம பகுதியிலிருந்து அக்குரஸ்ஸ பகுதிக்குச் சென்ற பஸ்ஸொன்றும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு சென்றபோதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதன்போதே, தவலம பகுதுியிலிருந்து வந்த பஸ் மற்றைய பஸ்ஸுடன் மோதியதையடுத்து, தெனியாயவிலிருந்து வந்த பஸ், வீதியை விட்டு விலகி, பள்ளமொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பஸ்களின் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் தாக்குதலுக்குள்ளான பஸ் நடத்துநர், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .