2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புதிதாக 52 மதுபான அனுமதிப் பத்திரங்கள் விநியோகம்

George   / 2016 நவம்பர் 21 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடத்தில் புதிதாக 52 மதுபான அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மது வரித் திணைக்களத்தின் ஊடாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மேம்பாட்டு திணைக்களத்தின் அனுமதியுடன் இந்த புதிய அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 51.7 பில்லியன் லீற்றர் மதுபானம் மற்றும் 125.6 பில்லியன் லீற்றர் பியர் என்பன கடந்த வருடத்தில் உற்பத்திச் செய்யப்பட்டுள்ளதாக  மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனுமதிப்பத்திர கட்டணம் மற்றும் அபராத கட்டணம் ஆகியவற்றின் ஊடாக, 1.6 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .