2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

புத்தாண்டில் மின்தடை இல்லை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 12 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில் எவ்விதத் தடையுமின்றி மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று மின்வலுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். 

இந்த புத்தாண்டுக் காலப்பகுதியில், நிறுவனங்களுக்கான மின் விநியோகம் குறைந்தளவிலேயே மேற்கொள்ளப்படுவதால், மின் தடையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும், கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது, அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை, புத்தாண்டு தினங்களான 13 மற்றும் 14ஆம் திகதிகளில், எக்காரணம் கொண்டும் மின்சாரத்தடை ஏற்படுத்தப்படாது என்று உறுதியளித்த பிரதியமைச்சர், மின்நிலையங்களில் எவ்வித தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்படக்கூடாது என தான் பிரார்த்தித்துக்கொள்வதாக பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X