2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பிரபாகரனை கொல்ல மாத்தையா முயன்றார்

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலைச்செய்வதற்கு, அவ்வியக்கத்தின் முன்னிலை தலைவராக செயற்பட்ட மாத்தையா என்றழைக்கப்படும் மகேந்திராஜா முயன்றார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இவர், 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவின் றோ உளவுத்துறையின் உறுப்பினராக செயற்பட்டார் என்று நிவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர் நீனா கோபால் எழுத்திய, ராஜீவ்காந்தி படுகொலை எனும் புத்தகத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் என்றும் அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991ஆம் ஆண்டு படுகொலை செய்வதற்கு, சில மணித்தியாலங்களுக்கு முன்னர். தான் நடத்திய நேர்காணலின்போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு மிகநெருக்கமாக இருந்து செயற்படும் பொறுப்பை றோ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவராகிவிடவேண்டும் என்ற எண்ணம், மாத்தையவுக்கு இருந்தது என்றும் எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்தியாவின் இந்தத் திட்டம் கைகூடவில்லை. றோ அமைப்பின் உளவாளியாக மாத்தையா செயற்படுகின்றார் என்பதனை பிரபாகரன் அறிந்துகொண்டதன் பின்னர் 1993ஆம் ஆண்டு, மாத்தையா படுகொலைச் செய்யப்பட்டார் என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 2009ஆம் ஆண்டு மே மாதம், யுத்தம் நிறைவடையும் தருவாயின் போது பிரபாகரன், சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளையும் றோ அமைப்பு ஏற்படுத்தி கொடுத்திருந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அவ்வாறு சரணடைவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது இலங்கை அரசாங்கத்திடம் அல்ல, மூன்றாவது தரப்பிடமே சரணடையவிருந்தார் என்றும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு சரணடைந்தால் பிரபாகரனை தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திடம் கோரியிருந்ததாகவும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5