2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’மக்களுக்கான நிவாரணங்களை உடன் வழங்குங்கள்’

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தொடரும் மழையுடன் கூடிய வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி, அங்கிருந்தே, மேற்படி பணிப்புரையை விடுத்துள்ளார்.

அத்துடன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவையும் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில், நிதி ஒதுக்கீட்டைப் பிரச்சினையாக்கிக் கொள்ளாது, உரிய உதவிகளை, உடனடியாக வழங்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .