2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மஞ்சள் தூளில் கலப்படம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மஞ்சள் தூளில் கோதுமை மா கலந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கலப்படம் செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 80 சதவீதமான மஞ்சள் தூளில் கலப்படம் உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சந்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், தர நிர்ணய பணியகத்தினூடாக பரிசோதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த பரிசோதனையினூடாக மஞ்சள் தூளில் 80 சதவீத கோதுமை மா கலக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .