2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

மத வழிப்பாடு, தனியார் வகுப்புகளுக்கு அனுமதி

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார வழிமுறைகளுக்கு மத வழிபாடுகள் மற்றும் தனியார் வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை, தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் மத வழிப்பாட்டு தலங்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கு மாத்திரமே வழிபாடுகளில் ஈடுபட முடியுமென அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக தனியார் வகுப்புக்களில் 100 மாணவர்களை மாத்திரம் உள்வாங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 15ஆம் திகதி முதல் குறித்த கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X