2025 ஜூன் 18, புதன்கிழமை

முன்னணி நரம்பியல் நிபுணர் லஞ்சம் கோரினார்

Freelancer   / 2025 ஜூன் 18 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் பிரபல நரம்பியல் நிபுணர் டொக்டர் மகேஷி விஜேரத்ன, இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஜூன் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்படி, டொக்டர் விஜேரத்னவும் மேலும் இரு நபர்களும், சில மருந்து வகைகளை அரச மருத்துவமனைக்கு வேண்டுமென்றே கொள்முதல் செய்யாமல், தமது தனியார் மருத்துவ நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டப்பட்ட திட்டத்தினால் நோயாளிகளுக்கு ரூபா 30 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

டொக்டர் விஜேரத்ன இதற்கு முன்னரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் "துமிந்த சில்வா மருத்துவ மூடிமறைப்பு" விவகாரத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் இந்த குற்றச்சாட்டை டொக்டர் விஜேரத்ன தொடர்ந்து மறுத்து வருகிறார். (a )


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .