Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 26 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதை வர்த்தகத்துடன் தொடர்புடைய 13 கைதிகளுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென, சர்வதேச பொதுமன்னிப்புச் சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
ஜூன் 21ஆம் திகதியிலிருந்து ஜூலை முதலாம் வரை அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச போதை ஒழிப்பு தினத்துக்குள் போதை வர்த்தகத்துடன் தொடர்புபட்டு, மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இதத்தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 4 குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றுவது குறித்த ஆவணத்தில் இன்று ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாகவும் அச்சபை தெரிவித்துள்ளது.
எனவே இத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள அனைத்து திட்டங்களையும் நிறுத்துமாறு, சர்வதேச மன்னிப்புச் சபை பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு மரணத் தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கையை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களிலிருந்து மீட்டெடுக்க முடியாதென, சர்வதேச பொதுமன்னிப்புச் சபையின் தெற்காசிய வலய பணிப்பாளர் பிராஜ் பட்நைக் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
53 minute ago
1 hours ago