Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 23 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறு மூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் வீதி இரண்டாவது மையில் கல் பகுதியில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து திங்கட்கிழமை (23) அன்று அதிகாலை 4.45 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் வேனை செலுத்திய சாரதியும் 15 வயதுடைய சிறுமியும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி இரண்டாம் குறுக்குச் சேர்ந்த ஜேந்திரகுமார் சஞ்சய் , கருவப்பங்கேணி மற்றும் நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணி யில் உள்ள அவர்களது பன்றி வளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சம்பவதினமான திங்கட்கிழமை (23) அன்று அதிகாலை கார் சாரதியுடன் பயணித்தபோது கார் வேக கட்டுப்பாட்டை மீறி பணைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதியும் 15 சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த சிறுமியின் தாயாரான பாலச்சந்திரன் மோகன காந்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
உயிரிழந்தவர்களின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது டன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
18 minute ago
34 minute ago