2025 ஜூன் 23, திங்கட்கிழமை

“மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும்”

S.Renuka   / 2025 ஜூன் 23 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், மத்திய கிழக்கின் சமீபத்திய  பதற்றங்கள் குறித்து இலங்கை மிகுந்த கவலை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

அத்துடன், "நிலைமையைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பி, அமைதியை நிலைநாட்டவும் பராமரிக்கவும் தீவிர இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட வேண்டும்" என்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .