2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

மலசலகூடத்தில் பாரிய வெடிப்பு: மக்கள் அச்சம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலசலகூடத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெக்கிராவ பிரதேச செயலாளரின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திலேயே பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது,

வெடிப்பு சம்பவத்தின் போது பிரதேச செயலாளரும் அவரது அலுவலகத்தில் இருந்ததாகவும், வெடிவிபத்தில் பிரதேச செயலாளருக்கோ அல்லது ஊழியர்களுக்கோ காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிவிபத்தில் கழிவறையின் பாகங்கள், ஜன்னல்கள் உட்பட பல சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாரத்தின் ஆரம்ப நாளான திங்கட்கிழமை (07)  மக்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வந்து இந்த நிரப்பும் போது அலுவலக வளாகத்தில் இருந்துள்ளதுடன் பிரதேச செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X