2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

“மாலைத்தீவில் நம்மவர்களுக்கு வேலை வாய்ப்பு”

S.Renuka   / 2025 ஜூன் 03 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைத்தீவில் இலங்கையர்களுக்கு 100,000 வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போது 30,000 இலங்கையர்கள் மட்டுமே மாலைத்தீவில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கைக்கான மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் தெரிவித்தார். 

வெளியுறவு  அமைச்சகத்தில் திங்கட்கிழமை (02) அன்று மாலத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் இடையேயான சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாட் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திறமையான மற்றும் தொழில்முறை வேலை வகைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று மசூத் இமாட் அமைச்சர் விஜித ஹெராத்திடம் மேலும் தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவில் பணிபுரியும் இலங்கையர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் விஜித ஹெராத்தின் கேள்விக்கு பதிலளித்த மசூத் இமாட், மாலைத்தீவு அரசாங்கமும் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தியுள்ளது என்றும், பிரச்சினைகளைத் தீர்க்க ஏற்கெனவே ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .