2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மஹிந்தானந்தவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

Editorial   / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்காக குறித்த தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு மூவரடங்கிய கொழும்பு விசேட மேல நீதிமன்றம் இன்று (16) தீர்மானித்துள்ளது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, சத்தோச நிறுவனத்தின் ஊடாக நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சார்பில் ஆஜரான சட்டத்தரணி, எதிர்வரும் 26ஆம் திகதிவரை வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .