2026 மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை

மின்னுயர்த்திக்குள் சிக்கிய நோயாளர்கள்

Janu   / 2026 மார்ச் 12 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் மின்னுயர்த்தி (Lift) ஒன்று செயலிழந்து , 15 நோயாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் வியாழக்கிழமை (12) , இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் (OPD) அமைந்துள்ள மின்னுயர்த்தி ஊடாக மேல் மாடிக்கு செல்வதற்காக 15 பேர் அதற்குள் ஏறியுள்ளனர். இதன் போது, திடீரென அதன் கதவுகள் மூடப்பட்டு மின்னுயர்த்தி செயலிழந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு பிரிவினர், மின்னுயர்த்தியின் கதவுகளை உடைத்து அதற்குள் சிக்கியிருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X