2025 ஜூலை 05, சனிக்கிழமை

முதல் தவணை ஆரம்பத்தில் வவுச்சர்கள்

Editorial   / 2020 ஜனவரி 01 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சீருடை மற்றும் பாதணி வவுச்சர்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக வவுச்சர்களை தற்போது, பாடசாலை மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கவுள்ளன.

பொருளாதார துன்பத்துக்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு பாதணிகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய அதற்கான வவுச்சர் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .