Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 08 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட 177 வாகனங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க மற்றும் மூவரையும் செவ்வாய்கிழமை (08) அன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, முதல் மூன்று சந்தேக நபர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபாய் இரண்டு சரீர பிணைகளிலும் வழங்கினார், நான்காவது சந்தேக நபருக்கு 500,000 ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஆணையர் ஜெனரல் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, ஓய்வுபெற்ற தகவல் தொழில்நுட்ப உதவி இயக்குநர் பிரியந்த பண்டார, எழுத்தர் தம்மிக நிரோஷன் மற்றும் தொழிலதிபர் தனுஷ்க நுவான் குணரத்ன ஆகியோர் சந்தேக நபர்களாவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
26 minute ago
27 minute ago