2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது

Freelancer   / 2025 ஜூலை 14 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்துவாரம் - இப்பாவத்த சந்தி பகுதியில் 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 31 வயதுடைய பெண்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு 13, நிவ்வெம் சதுக்கப் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபருக்குச் சொந்தமான வீட்டை சோதனையிட்டனர். 

இதன்போது, 745 கிராம் ஐஸ் போதைப்பொருள், வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, அதற்கான 5 ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு முகத்துவாரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். 

முகத்துவாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .