2025 ஜூன் 18, புதன்கிழமை

முன்மாதிரிக்காக வாக்களித்த தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றால் வாக்களிக்கச் செல்ல அச்சம் கொண்டுள்ள வாக்காளர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, அவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கு, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர், மஹிந்த தேசப்பிரிய இன்று வாக்களிப்பில் கலந்துகொண்டார்.

மஹிந்த தேசப்பிரிய பம்பலப்பிட்டி- லிண்டிசே மகளிர் கல்லூரிக்கு இன்று காலை சென்று, வாக்களித்துள்ளார்.

தான் ஒரு வாக்காளராக 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று வாக்களித்துள்ளாகத் தெரிவித்துள்ள அவர், அச்சமின்றி அனைவரையும் வாக்களிப்பில் கலந்துகொள்ள செய்வதற்காகவே, தான் இன்று வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .