Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
S.Renuka / 2025 ஏப்ரல் 03 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை, மஹர நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (03) பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரும் வியாழக்கிழமை (03) நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சமீபத்தில் பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
50 minute ago
1 hours ago