Editorial / 2020 செப்டெம்பர் 24 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 205 பேர் இன்று (24) தமது வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
இதுவரை தனிமைப்படுத்தல் நிலையங்களில் 44,115 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளனர்.
முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் 68 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது, 6927 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து 356 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
அபுதாபியில் இருந்து 06 பேரும், கட்டாரில் இருந்து 63 பேரும், டுபாயில் இருந்து 287 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago