2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

‘மேல் மாகாணத்தில் 25 பாதாளக்குழுக்கள் செயற்படுகின்றன’

ஆர்.மகேஸ்வரி   / 2020 ஜூலை 19 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் 25 பாதாளக்குழுக்கள் உள்ளதாகத் தெரிவித்த மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், புலனாய்வுத் தகவல்கள் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதென்றார்.

இன்று (19) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த 25 குழுக்களில் 20 குழுக்கள் இப்போதும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு  இயங்குவதாகத் தெரிவித்த அவர், இந்த 20 குழுக்களுடன் சுமார் 388 ​பேர்  இணைந்திருப்பதாகவும் இவர்களில் பலர் தற்​போது சிறையில் உள்ள நிலையில், இவர்கள் சிறையில் இருந்தவாறே குற்றச் செயல்களுடன் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

இந்த 388 உறுப்பினர்களுளு் 26 பேர்  தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், வாகனங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .