Freelancer / 2025 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்த 15 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் அமெரிக்காவில் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசினார். அப்போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் உட்பட ஐரோப்பிய தலைவர்கள் உடன் இருந்தனர்.
இந்த சூழலில் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரான், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது உக்ரைன் போர் மற்றும் காசா போர் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். (a)
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago