2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மோடி வந்தடைந்தார்

Editorial   / 2019 ஜூன் 09 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தார்.

இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான போயிங் -737 ரக விமானத்திலேயே வந்தடைந்தார். அவருடைய மேலதிக பாதுகாப்புக்கென, அதே வகையைச் சேர்ந்த மற்றொரு விமானமும் வந்திறங்கியுள்ளது.

அவ்விரு விமானங்களிலும் 16 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.

பிரதமர் ​ந​ரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் வரவேற்று கொழும்புக்கு அழைத்துவந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .