2025 ஜூன் 09, திங்கட்கிழமை

முகத்துவாரம் கொலை: மூவர் கைது

George   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்துவாரம் ரெதிபாணாவத்தை பிரததேசத்தில் இடம்பெற்ற மனிதகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி முகத்துவாரம் ரெதிபாணவத்தை பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் வந்த சிலர், மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 30 வயது நபர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வு பிரிவினர், சந்தேகநபர்களை கைதுசெய்ததுடன் அவர்களிடமிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகளை கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரகள் கிரான்பாஸ் மற்றும் முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த குற்றப் புலனாய்வு பிரிவினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 6

மன்னிப்பு

3 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 5