2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மு.கா தலைவராக ஹக்கீம் மீண்டும் தெரிவு

Janu   / 2024 ஜூன் 23 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவராக மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 31 வது பேராளர் மாநாடு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் சனிக்கிழமை (22)  நடைபெற்றது. இதன் போது  முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவராக ரவூப் ஹக்கீம் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 31 வது பேராளர் மாநாடு ஆரம்பமான போது காரி அஷ்ஷெய்க் அப்துல் ஜப்பார் அவர்களினால் கிறாஅத் ஓதப்பட்டது. இதையடுத்து கட்சியின் கீதம் பாடப்பட்டது

இதன் பின்னர் கட்சியின் தேசிய தலைவராக   மீண்டும். பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் ஏக மனதாக தெரிவு செய்யப்படுவதாக கட்சியின் தவிசாளர் முழக்கம் மஜீத் அறிவித்தார்.

இதையடுத்து தக்பீர் முழக்கம், கரகோஷங்களுக்கு மத்தியில் தலைவர் ரவூப் ஹக்கீம் மாநாட்டுக்கு தலைமைவகித்து கட்சியின் 33 பேர் கொண்ட உயர் பீடத்தை அறிவித்தார்.

பிரதி தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான 

எச்.எம்.எம். ஹரீஸ்.

பைஸால் காசீம்.

அலி ஸாஹிர் மௌலானா.முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் .மன்சூர்  

எஸ்.எம்.ஏ. கபூர்   மற்றும். அன்வர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன்

தவிசாளராக  முழக்கம் மஜீத் 

செயலாளராக நிஸாம் காரியப்பர் 

பிரதி செயலாளராக மன்சூர் எ காதர் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தெளபீக் 

பொருளாளராக றஹ்மத் மன்சூர்

பிரதி அமைப்பாளராக  முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம் எஸ் உதுமாலெப்பை. தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக முபீன் 

சர்வதேச நாடுகளுக்கான இணைப்பாளராக சிறாஜ் மீராசாகிப் 

பிரதி பொருளாளராக யஹியாகான்  உட்பட 33 பேரையும் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.

இதையடுத்து தக்பீர் கூறி தெரிவை அங்கீகரித்தனர்.

இந்த பேராளர் மாநாடு கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் ஆளுநருமான ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் மிகவும் சிறப்பாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பேராளர்களின் கருத்துக்களும் இடம் பெற்றதுடன் நாடு முழுவதுமிருந்து அழைக்கப்பட்டிருந்த 1500 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .