2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

முதலை இறைச்சியும் முட்டைகளும் கசந்தன

Gavitha   / 2016 ஜனவரி 06 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கவுடுல்ல தேசிய பூங்கா 'ரோட வௌ' மீன்பிடித்துறைக்கு அருகில் பிடிக்கப்பட்டு, இறைச்சியாக்கப்பட்ட 12 அடி முதலையுடன் இருவர், சந்தேகத்தின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து, 34 முதலை முட்டைகள் மற்றும் 100  கிலோகிராம் முதலை இறைச்சி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அருகி வரும் இனமான முதலை, பாதுகாக்கப்பட  வேண்டிய உயிரினமாக காணப்படுகின்றது. முதலையைக் கொல்லுதல், இறைச்சியாக்கல், வீட்டில் வளர்த்தல் என்பன சட்டவிரோதமான செயல்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X