2026 மே 05, செவ்வாய்க்கிழமை

யசூசி அகாசிக்கு சபையில் பாராட்டு

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள புனர்வாழ்வளிப்பு, மீளக் கட்டியெழுப்புதல் ​​தொடர்பான ஜப்பானின் சமாதானப் பிரதிநிதி யசூசி அகாசி, நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

அவர், சபாநாயகர் கலரியிலிருந்து சபை நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

சபைக்குத் தலைமைத்தாங்கிக் கொண்டிருந்த பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, அவருடைய வருகையை சபைக்கு அறிவித்தார்.

அதன்போதே, சபையிலிருந்த இரு தரப்புகளையும் சேர்ந்தவர்கள், மேசைகளில் தட்டி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .