2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள புல்லுகுளத்தில் ஆண் ஒருவரின்  சடலமொன்று நேற்று (08) மாலை இனங்காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்திற்கு அருகில் உள்ள குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் தொடர்பில் தெரியவராத நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .