2025 மே 21, புதன்கிழமை

ரயில் விபத்தில் இளைஞர் பலி

Thipaan   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதாணையிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்துகொண்டிருந்த  ரயிலுடன் மோதுண்டு, 20 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாந் டிலசான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயில், மருதானையிலிருந்து கோட்டை ரயில் நிலையத்துக்கு பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .