2025 மே 21, புதன்கிழமை

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு திகதியில்லை

Kanagaraj   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் திகதி குறிக்கப்படாமல் உள்ளக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. முன்னதாக கருத்து தெரிவித்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, நம்பிக்கையில்லா பிரேரணைக்காக திகதி குறித்து தருமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கேட்டார்.

இதனிடையை எழுந்த அவைமுதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, 20016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்து விட்டது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .