2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

லக்‌ஷ்மன் கதிர்காமர் படுகொலை; சந்தேகநபர் ஜேர்மனில் கைது

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவர், ஜேர்மனியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான 39 வயதுடைய நவநீதன் என்பவரே, தெற்கு ஜேர்மனிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இந்நபர், ஈ.பி.டி.பிக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் ஜேர்மனிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், 2005 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .