2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

லக்கல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிகள் திருட்டு

George   / 2016 ஏப்ரல் 14 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்த, டி - 56 ரக துப்பாக்கி மற்றும் 5 ரிவோல்வர் என்பவற்றை நபரொருவர் தூக்கிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இரவு நேர கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி தூங்கியதையடுத்து, அவருக்கு அருகில் இருந்த சாவியால் துப்பாக்கி இருந்த அறை திறக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், துப்பாக்கி ரவைகள் காணமல் போகவில்லை எனவும் சம்பவம் இடம்பெற்ற போது, நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு நேர கடமையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X