Editorial / 2026 மார்ச் 12 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
பருத்தித்துறை - மருதங்கேணி பிரதான வீதியில், வலிக்கண்டி பகுதிக்கு அருகாமையில் இன்று காலை முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
குறித்த பிரதான வீதியை ஒட்டியுள்ள கரையோர நீர்நிலைகளில் அதிகளவிலான முதலைகள் வசித்து வருகின்றன. இவை இரவு நேரங்களில் உடல் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக (சூடு காய்வதற்கு) வீதியோரங்களுக்கு வருவது வழமையாகும்.
இவ்வாறு வீதிக்கு வந்த முதலையை, அந்த வழியாகச் சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே அந்த முதலை உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago